யாழ்.செம்மணியில் நடைபெறவுள்ள போராட்டம்: தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு
யாழ்ப்பாணம் அரியாலை - சிந்துபாத்தி புதைகுழி தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “யாழ்ப்பாணம் அரியாலை சிந்துபாத்தி புதைகுழி ஆய்வு தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என ''மக்கள் செயல்'' என்ற தன்னார்வ இளையோர் அமைப்பு ''அணையா விளக்கு'' மூன்று நாள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றது.
நீதி கோரி போராட்டம்
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் யாவரும் எதிர்வரும் 24.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.30 முதல் நண்பகல் 1.30 மணி வரை கலந்து கொண்டு எமது கட்சியின் ஆதரவினை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகையின் போது நாம் ஒற்றுமையாக இந்த கோரிக்கையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்திய இந்த கவனயீர்ப்பு மிக முக்கியமானது என்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றது.” என குறிப்பிட்பட்டுள்ளது.
மேலதிக தகவல்-ராகேஷ்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri