மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே பேருந்து சேவைகள் இடம்பெறும்: கெங்காதாரன் (Video)
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகள் ஜம்பது வீதமளவில் நாளைய தினம் இயங்குமென யாழ்.பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பேருந்து கம்பனிகள் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதாரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் இன்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் யாழ்.மாவட்ட செயலக மேற்பார்வையில் எரிபொருளை பெற்றுத்தர அரச அதிபரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகளை நாளை முதல் இயக்க தீர்மானித்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை
எரிபொருள் பெறுவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாளாக தொடர்ந்த யாழ்ப்பாண சாலை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு: முடிவுக்கு வந்தது(Video) |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 8 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
