மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை ஆரம்பிப்பது குறித்து வெளியாகியுள்ள தகவல்
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி அனுமதி கிடைத்தால் நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை முன்னெடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை போக்குவரத்து சபையின் உதவி பொதுமுகாமையாளர் பண்டுவ சுவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் பாடசாலைகளை திறப்பதன் முதற்கட்டமாக நாளைய தினம் 200இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மாணவர்களை பாடசாலைகளுக்கு கொண்டு செல்லும் சிசுசரிய பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri