வவுனியா விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!இருவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றம்
வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொகை 23 ஆக அதிகரித்துள்ளதுடன், இருவர் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து இன்று (05.11) அதிகாலை வவுனியா, நொச்சிமோட்டைப் பாலத்தில் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் உடனடியாக 16 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தோர் தொகை 23 ஆக அதிகரிப்பு
அதன் பின்னரும் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்து சிறிய காயங்களுக்கு உள்ளான மற்றும் உடல் நிலை பாதிப்படைந்த மேலும் 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் மதியம் வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் காயமடைந்தோர் தொகை 23 ஆக அதிகரித்துன்ளது.
அதில், இருவர் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அதிகாலை நொச்சிமோட்டைப் பகுதியில் அதிசொகுசு பேருந்து ஒன்று பாலத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளான போது, அதன் பின் யாழில் இருந்து வந்த அதிசொகுசு பேருந்து குறித்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் நோக்காக சாரதி செயற்பட்டமையால் பாலத்தின் மறுபக்கம் பாதையை விட்டு விலகி கால்வாய்க்குள் சென்றுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் முன்பாகவும் யாழில் இருந்து வந்த பிறிதொரு அதி சொகுசு பேருந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்களானது.
குறித்த இரு விபத்துக்களிலும் எவருக்கும் காயஙகள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் மூன்று விபத்துக்கள் தொடர்பாகவும் ஓமந்தை மற்றும் வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 18 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
