சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிய தடை - மீறினால் அபராதம்
பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் உடை அணிபவர்களுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வலது சாரியினர் கொண்டு வந்த ‘புர்கா தடை’ என்னும் மசோதா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 2009ம் ஆண்டு புதிய மினாராக்களுக்கு தடை விதித்த அதே குழுவால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம்
அந்த மசோதா புர்கா தடை என அழைக்கப்பட்டாலும், கால்பந்து போட்டி காண வந்த ஒருவர் முகத்தை மறைக்கும் வகையில் துணி கட்டுவதற்கும் சரி, பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் நிகாப் அணிவதற்கும் சரி, மொத்தத்தில் கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளை மறைக்கும் வகையில் உடை அணிய தடை என்பதே அதன் பொருளாகும்.
இந்த தடையை மீறுபவர்களுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டு வருகிறது. உண்மையில், 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. அது மிக அதிகம் என்பதால் தற்போது 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முகத்தை மறைப்பதற்கான தடை பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 9 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ஜனனியை இப்படி பார்த்திருக்கிறீர்களா? Manithan

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
