யாழ். பொது நூலக எரிப்பு: தென்னிலங்கையில் சிங்கள மக்கள் வெளியிட்ட எதிர்ப்பு (Video)
கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் யாழ். பொது நூலக எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப் பேரணியானது சகோதர மொழி இளைஞர், யுவதிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பேரணியில் தமிழ் மக்களை போன்று, சிங்கள மக்களும் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.
41ஆண்டுகள்
“அரச ஆதரவாளர்களால் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள்”என்று எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறு இப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் யாழ். நூலகம் எரியூட்டப்பட்டது.
இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது,
மேலும் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமானது இன்றுடன் 54வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ். நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறாவடு! |
தீயில் கருகிய தமிழர் வரலாறு..! சிங்கள ஆதிக்கத்தின் மற்றுமொரு கோரம் (Video) |






அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
