பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - ஜனாதிபதி
அரசியல் அமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஹோமாகம கிரிவென்துடுவ பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான விசேட மருத்துவமனையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.
பூரண சுதந்திரம்
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அங்கங்களான நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியன பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பிலான பொறுப்பினை ஏற்க வேண்டும்.
நாட்டில் எந்தவொரு சமயத்தையும் வழிபாடு செய்வதற்கும், பின்பற்றுவதற்கும் பூரண சுதந்திரம் உண்டு. எனினும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்ற விவகாரத்தில் வாதம் செய்ய முடியாது.
அதனை எவரேனும் மாற்றுவதற்கு விரும்பினால் அரசியல் சாசனத்தை மாற்றுமாறு அவ்வாறானவர்களை கோருகிறார்கள்.
மக்கள் ஆணை
நிறைவேற்று அதிகாரம், நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் என்பன பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கத் தவறுவது அரசியல் சாசனத்தை மீறும் செயல். மக்கள் ஆணை, பௌத்த மதத்திற்கு முன்னுரி அளித்தல் மற்றும் பௌதீக ஒருமைப்பாட்டை பேணுதல் அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகள் ஆகும்.
இந்த கோட்பாடுகளை பாதுகாத்துக் கொண்டே நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
