பௌத்தர்கள் விஹாரைகளுக்கு செல்வதை கட்டாயப்படுத்த வேண்டும் - பிரதமர்
பௌத்தர்கள் வாரத்தில் ஒரு நாளேனும் விஹாரைகளுக்கு செல்ல வேண்டும் என்பதனை கட்டாயப்படுத்த வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கல்முருவ ஸ்ரீ சுனந்தாராமய விஹாரையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது இளைய சமூகத்தினர் பிழையான வழிகளில் செல்லாதிருப்பதனை உறுதி செய்ய அவர்கள் விஹாரைகளுக்கு செல்வதனை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை தஹாம்பாசல் (அறநெறிப்பாடசாலை) அனுப்புவது கட்டாயப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஏனைய மதத்தினர் மத வழிபாடுகளை சரியான முறையில் செய்கின்றார்கள் எனினும், பௌத்தர்கள் விஹாரைகளுக்கு செல்வதில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
எனினும், ஏனைய மதங்களில் ஞாயிறு கட்டாயம் தேவாலயம் செல்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தர்கள் என்ற வகையில் வாரத்தில் ஒரு நாள் அல்லது பௌர்ணமி தினத்திலேனும் விஹாரைகளுக்கு செல்வது கட்டாயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam