பௌத்தர்கள் விஹாரைகளுக்கு செல்வதை கட்டாயப்படுத்த வேண்டும் - பிரதமர்
பௌத்தர்கள் வாரத்தில் ஒரு நாளேனும் விஹாரைகளுக்கு செல்ல வேண்டும் என்பதனை கட்டாயப்படுத்த வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கல்முருவ ஸ்ரீ சுனந்தாராமய விஹாரையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது இளைய சமூகத்தினர் பிழையான வழிகளில் செல்லாதிருப்பதனை உறுதி செய்ய அவர்கள் விஹாரைகளுக்கு செல்வதனை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை தஹாம்பாசல் (அறநெறிப்பாடசாலை) அனுப்புவது கட்டாயப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஏனைய மதத்தினர் மத வழிபாடுகளை சரியான முறையில் செய்கின்றார்கள் எனினும், பௌத்தர்கள் விஹாரைகளுக்கு செல்வதில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
எனினும், ஏனைய மதங்களில் ஞாயிறு கட்டாயம் தேவாலயம் செல்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தர்கள் என்ற வகையில் வாரத்தில் ஒரு நாள் அல்லது பௌர்ணமி தினத்திலேனும் விஹாரைகளுக்கு செல்வது கட்டாயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
