பௌத்தர்கள் விஹாரைகளுக்கு செல்வதை கட்டாயப்படுத்த வேண்டும் - பிரதமர்
பௌத்தர்கள் வாரத்தில் ஒரு நாளேனும் விஹாரைகளுக்கு செல்ல வேண்டும் என்பதனை கட்டாயப்படுத்த வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கல்முருவ ஸ்ரீ சுனந்தாராமய விஹாரையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது இளைய சமூகத்தினர் பிழையான வழிகளில் செல்லாதிருப்பதனை உறுதி செய்ய அவர்கள் விஹாரைகளுக்கு செல்வதனை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை தஹாம்பாசல் (அறநெறிப்பாடசாலை) அனுப்புவது கட்டாயப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஏனைய மதத்தினர் மத வழிபாடுகளை சரியான முறையில் செய்கின்றார்கள் எனினும், பௌத்தர்கள் விஹாரைகளுக்கு செல்வதில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
எனினும், ஏனைய மதங்களில் ஞாயிறு கட்டாயம் தேவாலயம் செல்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தர்கள் என்ற வகையில் வாரத்தில் ஒரு நாள் அல்லது பௌர்ணமி தினத்திலேனும் விஹாரைகளுக்கு செல்வது கட்டாயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri