போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு உட்பட இருவர் கைது!
திருகோணமலை கோமரன்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திகடுவ பகுதியில் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(26.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பௌத்த பிக்கு வசம் இருந்து 1520 மில்லிகிராம் கஞ்சாவும், சிவில் பாதுகாப்பு படையினரின் வசம் இருந்து 540 கிராம் கஞ்சாவும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது
பௌத்த பிக்கு புலிகண்டி குளம் பகுதியில் உள்ள விகாரையில் வசித்து வருவதாகவும் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி மதவாச்சி சிவில் பாதுகாப்பு படை திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா என்பவற்றை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam