சிகப்பு சீனி தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் வெள்ளை சீனியை சிகப்பு சீனியாக மாற்றும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெனியாய ஹான்போட் பிரதேசத்தில் நீண்ட காலமாக சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் வெள்ளை சீனியை சிகப்பு சீனியாக மாற்றும் தொழிற்சாலையொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையில் இருந்து 2000 கிலோ கிராம் நிறையுடைய சீனி மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தகவல்
இதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திர சாதனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதற்கமைய சீனியில் கலப்படம் செய்வதற்காக சீமெந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சுற்றிவளைப்பின்போது சீமெந்து கலவை, தராசு, எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்: சட்டத்தரணி பகிரங்க குற்றச்சாட்டு (Video)
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri