ஆலய உண்டியலை உடைத்த சந்தேகநபர் - மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த காவலாளி
மட்டக்களப்பு - கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயத்திற்கு மன்னார் வீதியில் அமைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முற்பட்ட ஒருவரை ஆலய காவலாளி மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயத்தின் முன்னால் திருப்பெருந்துறை வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலய உண்டியலை சம்பவ தினமான நேற்று இரவு 10.30 மணியளவில் உடைத்துள்ளனர்.
இதன்போது சத்தம் கேட்டு ஆலயத்தில் காவலுக்கிருந்த காவலாளி வீதிக்கு வந்தபோது உண்டியலை உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபரொருவரை மடக்கிப் பிடித்து பொலிஸாரை வரவழைத்து ஒப்படைத்துள்ளார்.
இதில் கைது செய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அவரை விசாரணையின் பின்னர் விடுவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam