போதைப்பொருட்களுடன் கைதான பிரித்தானிய யுவதி வழங்கிய வாக்குமூலம்
இலங்கையில் கடந்த வாரம் பெருமளவு போதைப்பொருள் பொதியுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய யுவதி,டான் என்பவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த டான் என்பவரே, தமது பொதிகளில் போதைப்பொருட்களை பொதியிட்டிருக்கவேண்டும் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
முதல் இரவு தாம் தமது உடமைகளை பொதியிட்டு, நித்திரைக்கு சென்ற பின்னர், அடுத்த நாள் காலையில், பொதிகளை பரிசோதிக்கவில்லை என்றும் அவர் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிரபராதி
சுமார் 46 கிலோ கிராம் நிறை கொண்ட குஸ் ரக போதைப்பொருளை எடுத்து வந்ததாக தெரிவித்தே பிரித்தானிய யுவதியான சார்லோட் மே லீ அண்மையில் கைது செய்யப்பட்டார்.

எனினும், தான் நிரபராதி என்று வலியுறுத்தும் அவர், டான் என்று அழைக்கப்படுபவர், இலங்கையில் விடுமுறைக்காக தன்னுடன் இணைந்துக்கொள்வதாக உறுதியளித்ததாகவும், குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு லண்டனை சேர்ந்த லீ, அவரது தொலைபேசி எண் அல்லது குடும்ப விபரங்களை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அவர் இலங்கைக்கு பயணித்தாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், இதற்கு முன்னர் இலங்கைக்கு தாம் செல்லவில்லை என்று லீ குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam