காணாமல் போயுள்ள பிரித்தானியாவில் பயிற்சி பெற்ற இலங்கை இராணுவ அதிகாரி
பிரித்தானியாவின் புகழ்பெற்ற சன்டஸ்ட்(Sandhurst) இராணுவ கல்லூரியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய இலங்கையின் கெடற் அதிகாரியான இரண்டாம் லெப்டினன்ட் பதவியில் உள்ள ஒருவர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
44 வார தீவிர பயிற்சிக்குப் பிறகு வெளியேறிய 209 அதிகாரிகளில் ஒருவரான அவர், பயிற்சிக்கு பின்னராக அணிவகுப்பை அடுத்து இந்த வாரம் இலங்கைக்கு திரும்பவிருந்தார்.
எனினும் திட்டமிடப்பட்ட விமானத்துக்கு அவர் வரவில்லை.
விமான நிலையம்
முன்னதாக, இலங்கையின் பிரித்தானிய உயர் ஸ்தானிகரகம், கடந்த சனிக்கிழமையன்று அவருக்கான விமான நிலைய போக்குவரத்தை ஏற்பாடு செய்ய முன்வந்தபோது, அவர் அதனை நிராகரித்து தாமே நேரடியாக விமான நிலையத்துக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் பிரித்தானியாவில் தங்கியிருக்கும் இடம் அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு தெரியும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மாவனல்லையை சேர்ந்த இந்த அதிகாரியின் செயல் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
