இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு
பிரித்தானியாவின் செவனிங் உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
செவனிங் என்பது பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு நிதியுதவியாகும், இது சர்வதேச மாணவர்களுக்கு முதுகலை படிப்பிற்காக வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை பிரித்தானியாவில் ஒரு வருட முதுகலை படிப்பை மேற்கொள்ள விரும்புவோருக்கு நிதியுதவி செய்கிறது.
பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம்
ஒரு அறிக்கையை வெளியிட்டு, உதவித்தொகை திட்டத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்குமாறு உயர்ஸ்தானிகராலயம் நினைவூட்டியுள்ளது.
பேஸ்புக்கில் ஒரு பதிவில், ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 07 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
உதவித்தொகை திட்டம்
மேலும் விவரங்களுக்கு இணையத்தை பார்வையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பிரித்தானிய பல்கலைக்கழகத்திலும் எந்தவொரு முதுகலை படிப்பையும் மேற்கொள்ள செவனிங் உதவித்தொகை திட்டம் முழு நிதியுதவியுடன் கூடிய உதவித்தொகைகளை வழங்குகிறது.
