ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறங்கிய இங்கிலாந்து விமானம்
இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக போர் விமானமொன்று ஜப்பானின் ககோஷிமா சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் கடற்பகுதியில் தென் சீன கடலில் இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக போர் விமானம் நேற்று காலை 11.30 மணியளவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எப்-35 ரக போர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
[9GOFD1N]
தொழில்நுட்ப கோளாறு
இதை அறிந்த விமானி, போர் விமானத்தை ஜப்பானின் ககோஷிமா சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கினார். இதனால், விமான நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு பயணிகள் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
எப்-35 போர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த மாதம் 14ஆம் திகதி இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
8 நாட்கள் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்ட அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டப்பின் கடந்த 22ஆம் திகதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றது.
தற்போது 2வது முறையாக எப்-35 ரக போர் விமானம் ஜப்பானில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 22 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
