ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை மீறி முடிவை மாற்றிய பிரித்தானியா (VIDEO)
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் மீண்டும் ஒருமுறை பிரித்தானியா ஈழத்தமிழர்களை ஏமாற்றும் அல்லது கால நீடிப்பிற்கு செல்வதற்கான வாய்ப்பு நிச்சயமாக உள்ளதாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் செயற்பாட்டாளர் பாலாமாஸ்டர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் செயற்பாட்டின் பிரித்தானியாவின் தற்போதைய பங்களிப்பின் தன்மைகள் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்து வருகின்ற வெளித்திட்டங்கள் மிகவும் முன்னேற்றகரமாக உள்ளது என பிரித்தானியாவின் அமைச்சர் லோட் தாரிக் அஹமட் தெரிவித்த கருத்து கண்டனத்திற்குரியது. உண்மையில் அவரது நோக்கம் குறித்து சிந்திக்க வைத்துள்ளது.
அதாவது, ஈழத்தமிழர்கள் விடயத்தில் பிரித்தானியாவில் இருக்கக்கூடிய தமிழ் அமைப்புக்கள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல விடயங்களை தொடர்ச்சியாக வெளிக்காட்டி வருகின்றனர்.
இருப்பினும், பிரித்தானியாவின் அமைச்சர் லோட் தாரிக் அஹமட் இவை அனைத்தையும் அறிந்தும் இலங்கைக்கு சென்று தெரிவித்த கருத்து மிகவும் வேதனைக்குரியது.அல்லது அவர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இவ்வாறு கருத்து தெரிவித்தாரா என்ற சந்தேகமும் நிலவுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.