நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளை கொண்டு வருவேன்:ரோஹன விஜேவீரவின் புதல்வர்
இலங்கை நாடாளுமன்றத்தில் மேல் மற்றும் கீழ் என இரண்டு சபைகளை ஏற்படுத்தி, நாட்டில் அறிஜீவிகளை கொண்ட மேல் சபையை நடைமுறைக்கு கொண்டு வரப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் (Rohana wijeweera) புதல்வர் உவிந்து விஜேவீர (Uvindu Wijeweera) தெரிவித்துள்ளார்.
நாட்டின் நாடாளுமன்ற முறையை தமது ஆட்சியின் கீழ் முற்றாக மாற்றியமைக்க எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் நாடாளுமன்றம் இரட்டை முறைமையை கொண்ட நாடாளுமன்றமாக இருக்க வேண்டும்.
நாட்டின் கல்விமான்கள், புத்திஜீவிகள், அரச சேவையில் இருந்து ஓய்வுபெறுவோர் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும். மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு ஒரு அணியாக இருப்பார்கள்.
இவர்கள் எப்படியான தீர்மானங்களை நாடாளுமன்றத்திற்குள் எடுத்தாலும் மேல் சபையில் இருக்கும் புத்திஜீவிகள் அதற்கு அனுமதி வழங்கிய பின்னர், நாட்டுக்குள் அவற்றை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் உவிந்து விஜேவீர குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் தலைமுறை அமைப்பின் மாத்தளை மாவட்ட கூட்டம் நாவுல நகரில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றதுடன் அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே உவிந்து விஜேவீர இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
செவ்வாய்- ராகு இணைவு தீ விளையாடப் போகுது.. வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை காணும் 3 ராசிகள் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri