பாமன்கடை சந்தியில் நிர்மாணிக்கப்படும் பாலத்தின் நிர்மாண பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

People Bridge Johnstonfernando Gotapayarajapaksa
By Kanamirtha Feb 27, 2022 07:27 AM GMT
Report

இலங்கையின் முதலாவது பாலமான பாமன்கடை சந்தியில் நிர்மாணிக்கப்படும் பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு -ஹொரணை 120 வீதியில் நிர்மாணிக்கப்படும் புதிய பாமன்கடை பாலத்தின் நிர்மாணப்பணிகளால் வீடுகளை இழக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய வீடுகளின் சாவியை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் கையளித்தார்.

பாமாங்கடையில் புதிய பாலம் கட்டுவதற்காக வீடுகள் அகற்றப்படுகின்றன. வெளியேற்றப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு 05, கலிங்க மாவத்தையில் நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில்,

''இலங்கையின் அகலமான பாலம் பாமன்கட சந்தியில் உள்ளது. இந்த பாலத்தின் அகலம் 44 மீட்டர். கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் பணியை முடித்து விடுவோம் என நம்பினோம்.

ஆனால், அந்தத் திட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால், கூடுதலாக 90 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி, மார்ச் 31ஆம் திகதிக்குள் பணிகளை முடிக்க எதிர்பார்க்கிறோம். இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

வீதியின் மறுபுற பணிகளை நிறைவு செய்து திறக்க எதிர்பார்க்கிறோம். எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மக்களின் வசதிக்காக இலங்கையின் அகலமான பாலமாக இந்தப் பாலத்தைத் திறந்து வைப்போம் என நம்புகிறோம்.

பாலம் கட்டப்பட்டதால் எட்டு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. அந்த குடும்பங்கள் அனைவருக்கும் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு சாவிகள் இன்று கையளிக்கப்பட்டன.

மக்களுடன் மிகவும் நட்புறவுடன் இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். மக்களை வீதிக்கு அழைத்துச் செல்லும் அபிவிருத்தி எம்மிடம் இல்லை. அவர்களுக்கு வீடுகள் தருவதாக உறுதியளித்தோம்.

அந்த வீடுகள் இருந்த நிலத்தில் தான் நாங்கள் நிற்கிறோம். எமது அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சர் இந்திக ஆகியோர் இணைந்து இன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான சாவிகளைக் கையளித்தோம். கடினமான காலங்கள் இருந்தபோதிலும், நாங்கள் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தவில்லை.

நாங்கள் முன்னோக்கி நகர்கிறோம். சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின்கீழ் வீதி வலையமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் சுகாதார சேவையை மேம்படுத்துதல் மற்றும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய என எமது ஜனாதிபதி உறுதியளித்தார்.

இக்கட்டான காலத்திலும் அதையெல்லாம் நிறைவேற்ற அரசு கடுமையாக உழைத்து வருகிறது. கோவிட் காரணமாக எதுவும் செய்ய முடியாது என்று தலைமறைவாகும் அரசு அல்ல நாங்கள்.

மக்களுக்கு வாக்குறுதியளித்த படி, எத்தனை தடைகள், பொருளாதார பிரச்சினைகள் வந்தாலும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்த நாங்கள் தயாராக இல்லை. இன்னும் சில மாதங்களில் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் 'இன்று உணவு இல்லை, எரிபொருள் இல்லை, மின்சாரம் துண்டிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும்போது அமைச்சர் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் பட்டினிச்சாவு இல்லை. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சமீபகாலமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எந்த வாகனமும் குறைவாக ஓடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

ஒன்றரை வருடங்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது மக்களுக்குத் தெரியும். அப்போது சாதிக்க முடியாத நாட்டின் பொருளாதாரத்தையும், தமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்த மக்கள் தங்களின் முழு பலத்தையும் பயன்படுத்த பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இன்று சீமெந்து பிரச்சினை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆனால் மகிந்த ராஜபக்சவுக்குப் பிறகு இலங்கையின் வரலாற்றில் பெரும்பாலான கட்டுமானங்கள் இக்காலகட்டத்தில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜாக்சவுக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் பெரும்பாலான வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

தனியார் துறையின் பெரும்பாலான கட்டிடங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை, இன்று இன்னும் அதிகமானவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் நிர்மாணிக்கப்படுகின்றன.

அதனால், தேவை அதிகரித்துள்ளது. இவற்றைக் கண்டு எதிர்க்கட்சிகள் பாராமுகமாக இருப்பது போல் உள்ளது. ஒரு வீதி அமைக்கப்படுவது பார்க்கும்போது, ​​தங்கள் காலத்தில் அதைச் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம்தான் அவர்களுக்கு இருக்கிறது.

பாலம் கட்டப்படுவதைப் பார்க்கும்போது, ​​எங்களால் இதைச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். மகிந்த ராஜபக்சவை அவதூறாகப் பேசி, அன்று ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.

மகிந்த ராஜபக்ச உருவாக்கிய சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தைத் தக்கவைக்க முடியாத ஆட்சியே அன்று இருந்தது . அரசியல் கூட செய்யாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எப்படி வந்து இதையெல்லாம் செய்தார் என விசனம் தெரிவிக்கின்றனர்.

அதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை. அதனால்தான் நெடுஞ்சாலை அமைக்கும் போது அதனை சாப்பிட முடியுமா என்று கேட்கிறார்கள். தங்களின் வயிற்றை நிரப்புவதற்காகத் தான் அன்று நெடுஞ்சாலைகளை அமைத்தனர்.

ஆனால் நாங்கள் இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காகத் தான் இவற்றை நிர்மாணித்து வருகிறோம். அதனால் எங்களுக்கு ஆச்சரியமில்லை. தேர்தல் வந்தால் கோவிட் கோவிட் என்று சொல்லி ராஜபக்ச எதுவும் செய்யவில்லை என்பார்கள்.

எனவே நாங்கள் ஆட்சியிலிருந்தால் இப்படிச் செய்திருப்போம் எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள் என்பார்கள். ஆட்சியைப் பிடிக்க நாங்கள் தயார் என்று கூறுவதைக் கண்டேன்.

யார் இந்த நபர்கள் ? இந்த நாட்டையே தின்று, இந்த நாட்டை அழித்து, மத்திய வங்கியைக் கொள்ளையடித்து, நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டி, நாட்டின் தேசியப் பாதுகாப்பை அழித்து, இன்று நாட்டில் அப்பாவி மக்களை இறப்பதற்கு வரிகட்ட தான் இவ்வாறு சொல்கிறது.

கோவிட்இருந்தபோதிலும் அழிந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது நிலைமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்டுள்ளது. பிரிமதாசவின் கும்பல் தலைவர்களுடன் இருந்து ஒன்றாகத் திருடி பின்னர் தலைவர்களைத் தாயை விட்டுச் சென்ற எலிகள் தான் தங்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்கின்றனர்.

இந்த நாட்டின் சவால்களை ராஜபக்சக்களால் வெற்றிகொள்ள முடியும். அந்த சவால்களை ஜனாதிபதியும் பிரதமரும் நிச்சயமாக வெற்றிகொள்வார்கள்'' என்றார்.

மத்திய வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவதாகக் கூறினாலும் அவர்கள் சுதந்திரமாக இருப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

அரசியல் களத்தில் திருடர்களைக் காதால் பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறோம் என்று கூறினாலும் கூட அவர் எடுத்துக்கொண்டு வர முடியாது. காதினால் இழுத்துக்கொண்டு வந்ததாக மனித உரிமை ஆணைக்குழுவுக்குச் செல்வார்கள் .

நாட்டில் ஒரு சட்ட அமைப்பு உள்ளது. இவர்களை மத்திய வங்கிக்கு நியமித்தது யார் என்பது உங்களுக்குத் தெரியும். சட்டரீதியாக உணரவும், மறைக்கவும் வாய்ப்பு இருப்பதாக மத்திய இருக்கிறது. அவர்கள் ஒப்படைக்கப்பட மாட்டார்கள், ஆனால் நாங்கள் சட்ட அமைப்பிற்குள் செயல்படுகிறோம்.

தற்போதைய அரசாங்கம் சட்டத்தைக் கையில் எடுத்து நீதிபதியுடன் பேசி சி.ஐ.டி பணிப்பாளர்களுடன் பேசி பணிப்பாளரை வீட்டில் பானைகள் கழுவுவதற்கு அழைக்கும் அரசாங்கம் அல்ல என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

இது மிகவும் ஜனநாயகமான அரசு, பதவியில் அமர்ந்து இருந்த முன்னர் இருந்த தலைவர்கள் பத்திரிக்கையாளர்களின் பெயரைச் சொல்லி கடுமையாக விமர்சித்தது நினைவிருக்கும். இன்று அப்படியொரு பிரச்சினை இல்லை, சட்டம் அமுல்படுத்தப்படும்.

அதனால் தான் காதைப் பிடித்து இழுத்து வருவதற்குப் பதிலாக கோவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது'' என கூறினார்.

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் தயாசிறி ஜயசேகர போன்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாட்டின் மோசமான நிலையைக் காணப்படுவதாகத் தெரிவித்திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில், அரசாங்கத்தை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் மக்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

டொலர் நெருக்கடி இல்லாவிட்டால் நாங்கள் உங்களை வரிசையில் நிறுத்தியிருக்க மாட்டோம் என பிரதமர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தெளிவாகக் கூறப்பட்டது.

இந்த நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்பட்டது. எனவே இது நல்லாட்சி அரசாங்கம் அல்ல. இது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம். நாம் அவற்றைக் கொண்டு வருவோம்'' என கூறினார்.

மின்வெட்டு காரணமாக எவ்வளவு காலம் இருட்டாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

நாட்டை இருட்டில் வைக்க முடிவு செய்தவர் அந்த நல்லாட்சி குழுவினர் தான். கடந்த ஐந்து ஆண்டுகளாக மின் உற்பத்தி அதிகரிக்க எதுவும் செய்யவில்லை.

எனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானம் எடுத்துள்ளார். அந்த முடிவின்படி நாங்களும் செயல்படுகிறோம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நுரைச்சோலை மின் நிலையம் அமைத்து அதுபோன்று இந்த பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பார்.எதையும் செய்யாத நல்லாட்சி அரசாங்கம் தான் மெழுகுவர்த்தியையும் டோர்ச்சையும் தூக்கிக் கொண்டிருக்கிறார்கள் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல.

இந்த நேரத்தில் மழை போதிய அளவு பெய்யவில்லை. அத்தோடு நல்லாட்சியில் தேவையான முடிவுகள் அடுத்துச் செயற்படுத்தப்படவில்லை இவை தான் இந்த பிரச்சினைக்குப் பிரதான காரணம்.

புதிய விடயங்களைச் சேர்க்கத் தேவையில்லை எனவும், உள்ள வளங்களை முகாமைத்துவப்படுத்தினால் மின்சார நெருக்கடியைத் தீர்க்க தீர்க்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், சம்பிக்க ரணவக்க சொல்வது சரிதான். உற்பத்தி குறைந்தால் திடீர் கொள்முதல் மூலம் திருட முடியும் என்பது சம்பிக்க ரணவக்கவுக்கு தெரியும்.

எனவே அந்த மனிதர் சொல்வது சரிதான். நான் அதை ஆமோதிக்கிறேன். இதை சரி செய்ய அவர் விரும்பவில்லை. கோட்டாபய ராஜபக்ச இவற்றை அபிவிருத்தி செய்தால் தங்களுக்கு ஆட்சிக்கு வந்து திருட முடியாது என்று பயம் சம்பிக்க ரணவக்கவுக்கு இருக்கிறது .

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் மாத்திரம் முதலீடு செய்வது பொருத்தமானதல்லவா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 

முதலீடு செய்யாவிட்டால் நாட்டில் எப்படி பணம் புழக்கத்தில் இருக்கும். இந்த பாலத்தில் முதலீடு செய்த காரணத்தினால் கிராமங்களில் எத்தனை பேர் வேலை செய்து சம்பளம் வாங்குகிறார்கள்?

இப்போதே இந்த அபிவிருத்திப் பணிகளை நிறுத்தினால் இவர்களுக்கு யார் உணவளிப்பார்கள்? ஊழியர்கள், தொழிலாளர்கள், பொறியாளர்கள், பெண்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது? முதலீடு இருக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் முதலீடு செய்வதை நிறுத்தியது தான் அவர்கள் செய்த தவறு.

முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்யாதீர்கள் என்பது மூளை இல்லாத கட்சிகள். இந்த முதலீடுகளில் பணம் மோசடியாகப் பெறப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

திருடியவன் எல்லோரும் திருடுவதாக நினைக்கிறான். இந்த நாட்டின் மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவர்கள் கடலை விற்கும் மனிதனும் கடலையைத் திருடுவதாக நினைக்கிறார்கள். திருடன் எப்படி திருடுவது என்று நினைக்கிறான். இதனால் திருடர்கள் என்ன செய்தாலும் திருடுகிறார்கள் என்று நினைக்கிறார்கள் என கூறினார்.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US