பாண் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை குறைப்பு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
10 ரூபாவால் சிற்றுண்டிகளின் விலையை குறைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோதுமையின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்படாது
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கோதுமை மாவின் விலை 430 ரூபாவாக காணப்பட்டது. தற்போது சந்தையில் 170, 160 ரூபாவாக காணப்படுகின்றது. தட்டுப்பாடுகள், விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காகவே கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்துள்ளோம்.
எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவின் காரணமாகவே பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |