பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக உணவுகளுக்கு 10 ரூபாய் வரை விலை அதிகரிப்பு
பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக தயாரிப்பு உணவு பண்டங்களின் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட தினத்தில் வெதுப்பக பண்டங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெதுப்பக உரிமையாளர் சம்மேளன தலைவர் ஜெயவர்த்தன, விலை உயர்வு தொடர்பில் எதிர்வை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அன்றாடம் வெதுப்பக உணவுகளை கொள்வனவு செய்வோர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் விலையை உயர்த்தியது, வாழ்க்கை செலவை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri