இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளைஞன் - மரணத்திலும் பலரை காப்பாற்றிய செயல்
கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனால் 5 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
மூளைச்சாவு அடைந்த பல்கலைக்கழக மாணவரின் இரு சிறுநீரகங்கள், இதயம், கணையம், கல்லீரல், கண்கள் ஆகியவற்றை வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் உள்ள ஐந்து நோயாளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பார்வையற்ற இருவருக்கு ஒளி வழங்குவதற்காக அவரது கண்கள் இலங்கை கண் மருத்துவ சங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மூளைச்சாவு
வேயங்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இந்த தியாகத்தை செய்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது தோல், இரத்த நாளங்கள் மற்றும் முழங்கால் எலும்புகள் உட்பட பல உடல் உறுப்புகள் அவரது பெற்றோரின் ஒப்புதலின் பேரில் நோயாளிகளுக்கு மாற்று சிகிச்சைக்காக தானமாக வழங்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 7 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
