கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காதலன் படுகொலை! ஹெரோயினுடன் கைதான காதலி
காலி மாவட்டத்தின் அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு இளைஞரை மிதிகமவுக்கு அழைத்த குறித்த பெண், அவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாகியிருந்த பெண் கைது
இருவருக்கும் இடையே காதல் தொடர்பு காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மஹரகம பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில், சந்தேகநபரான பெண் 15 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
24 வயதான குறித்த இளைஞர் கடந்த 11ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.