வைத்தியசாலையின் அசமந்த போக்கால் உயிரிழந்த இளைஞன் - மக்கள் கடும் குற்றச்சாட்டு
கண்டியில் வைத்தியசாலையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்தமைக்கு, வைத்தியசாலை நிர்வாகமே காரணம் என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மடுல்கலை பகுதியிலுள்ள வைத்தியசாலையில் திடீர் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்ததை அடுத்து அங்கு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
மடுல்கலை - கிறீன்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளைஞன் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதி
திடீர் சுகவீனம் காரணமாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 2.30 அளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தின் அசமந்த போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக வைத்தியசாலை வளாகத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனை
உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 19 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
