யாழில் தகப்பன் மற்றும் மகன் ஆகிய இருவருக்கு அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தகப்பன் மற்றும் மகன் ஆகிய இருவரையும் அச்சுறுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது நேற்று(24.07.2024) பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம்
கடந்த சனிக்கிழமை (20) நள்ளிரவு தமது வீட்டிற்க்குள் நுழைந்த தம்மை போதை தடுப்பு பொலிஸார் என அறிமுகம் செய்து தந்தை மற்றும் மகனை கை விலங்கிட்டு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவம் நான்காவது தடவையாக இடம் பெற்றுள்ளதாகவும் தனது மகன் தொடர்ந்து கல்வி கற்பதற்கு அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றைய தினம்(25) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam