இலங்கை மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்குவது குறித்து வெளியாகியுள்ள தகவல்!
இரண்டாவது அளவு தடுப்பூசி வழங்கல் முடிந்தவுடன், எதிர்காலத்தில் தொடர்புடைய குழுக்களுக்கு, கோவிட் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் என்ற மூன்றாவது ஃபைசர் தடுப்பூசி வழங்கல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய, அரச மருந்துக் கழகத்தின் தலைவர், வைத்தியர் பிரசன்ன குணசேன (Dr. Prasanna Gunasena) இரண்டாவது அளவு வழங்கப்படும் போதே பூஸ்டர் அளவை வழங்குவது குழப்பத்தை உண்டாக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் 800,000 ஃபைசர் டோஸ் செப்டம்பர் இறுதிக்குள் அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக இலங்கைக்கு வரும் என்று அரச மருந்துக் கழகத்தின் தலைவர், வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இருப்பினும், பூஸ்டர் தடுப்பூசி வழங்கல் குறித்த தெளிவான பரிந்துரைகளை இன்னும் தாம் பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பூஸ்டர் அளவுகளை ஆரம்பத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பெற்றுக்கொள்வார்கள் என்று குணசேன குறிப்பிட்டுள்ளார்