வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச சபையின் பேடகம் நூல் வெளியீட்டு விழா
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரவெட்டி தெற்கு - மேற்கு பிரதேச சபையின் 'பேடகம்' நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.
குறித்த நுால் வெளியீட்டு விழாவானது, நேற்று (22.02.2024) பிற்பகல் 4:30. மணியளவில் பிரதேச சபை செயலாளர் க.கம்சநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
அதேவேளை, இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பெண்களுக்கான வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நினைவுச் சின்னம்
அதனைத் தொடர்ந்து, 'பேடகம்' மலர் வெளியீட்டுக்காக பணியாற்றிய அனைவருக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், பிரதம் விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ.எம். சார்ள்ஸ் மற்றும் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதியின் வடக்கு மாகாண இணைப்பு செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri