வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நூல்வெளியீட்டு நிகழ்வு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் "அளிக்கப்படும் சாட்சியங்கள்" ஆவண கையேடு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட "அளிக்கப்படும் சாட்சியங்கள்"எனும் ஆவண நூல் இன்று காலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
குறித்து நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் மற்றும் வடக்கு, கிழக்கு தழுவிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் அவர்களின் சிறப்புரையும் மாவை சேனாதிராஜாவின் சிறப்புரையும் இடம்பெற்றுள்ளது.






பிரகாஷ்ராஜ் இல்லை.. கில்லி முத்துப்பாண்டி ரோலில் நான் தான் நடிச்சிருக்கணும்: பிரபல நடிகர் பேட்டி Cineulagam
கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு சிக்கலை உருவாக்கியுள்ள பிரித்தானியாவின் புதிய விதி News Lankasri