வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்
கொச்சியில் இருந்து டெல்லிக்கு(Delhi) புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
அதனை தொடர்ந்து விமானத்தை சோதனையிடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
அந்தவகையில், ஜெர்மனியின் பிராங்க்புட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட 'லுப்தான்சா' நிறுவனத்தின் போயிங் 787-9 டிரீம்லைனர் ரக விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம்
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் போலியானது என தெரியவந்ததை தொடர்ந்து விமானம் புறப்பட்டது.
இதேப்போல், டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல் மற்றும் விமான விபத்து போன்ற காரணங்களால் விமானத்தில் பயணிப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர் என்று கூறப்படுகின்றது.

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
