சிரிய தலைநகரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி - 16 பேர் படுகாயம்
சிரியா தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் (Cafe) ஒன்றில் இன்று நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்ததுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திற்கு மிக அருகில் உள்ள இந்த உணவகத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேசையின் அடியில் மறைத்து வைத்திருந்த வெடிபொருளை (IED) வெடிக்கச் செய்து தப்பியோடியுள்ளார்.
தீவிர சோதனை
சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவப் புலனாய்வு மற்றும் பொலிஸார் அப்பகுதியை முழுமையாக முடக்கி, மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் பாதுகாப்பு அமைச்சகக் கட்டடத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு டமாஸ்கஸில் அரங்கேறியுள்ள இந்த இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் சிரியாவில் கடுமையான பாதுகாப்புப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri