சுரேஷ் சலேயின் உளவு இரகசியங்களால் திணறும் பலர்! பிள்ளையானுக்கு புதிய நெருக்கடி
சுரேஷ் சலே தனது மடிகணினி மற்றும் கைபேசிகளின் கடவுச்சொற்களை (passwords) வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அவரது 38 வருட உளவுத்துறை ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
உதய கம்மன்பில இந்த விசாரணை மற்றும் கடவுச்சொற்களைக் கோருவதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று விமர்சித்துள்ளார்.
அவர் சுரேஷ் சலேயின் மன உறுதியைப் பாராட்டியும், விசாரணைகளை அரசியல் பழிவாங்கல் என்றும் குறிப்பிடுகிறார்.
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பிள்ளையான் தன்னை நோக்கி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், நீதிமன்றக் கூண்டில் அவர் காட்டிய சைகைகள் நீதிமன்ற அவமதிப்பு விவகாரமாகப் பேசப்படுகிறது.
இந்த விசாரணைகளை அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய முதலாம் எதிரியான ராஷித் முகமத் பாய்ஸுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து மற்றும் 'ரெட் அலர்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறைச்சாலைகளில் உள்ள சந்தேக நபர்களைச் சந்திப்பதும், சமூக வலைதளங்களில் விசாரணைகளை விமர்சிப்பதும் வழக்கை திசைதிருப்பும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்குகள் எங்கே செல்லும் மற்றும் நீதிமன்றம் இது தொடர்பாக அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது ஒரு விடை தெரியாத புதிராகவே இருப்பதாக உள்ளது.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam