சாரா தப்பிக்க உதவி செய்ததாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்குமாறு மனைவி கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்பவர் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார், எனவே சாராவை இந்தியாவுக்கு தப்பியோட உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட எனது கணவரான தேவகுமாரா விடுவிக்குமாறு அவரது மனைவியான டிலோஜினி கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு - மாங்காடு பகுதியிலுள்ள அவரது வீட்டில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எனது கணவரான தேவகுமார் என்பவர் சாரா என்ற புலஸ்தினியை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் சிஜடியினரால் கடந்த வருடம் 7 மாதம் 11ஆம் திகதி வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் கொழும்பில் இருந்து கல்முனை நீதிமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி கொண்டு வந்து மட்டக்களப்பு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
அத்துடன் சட்டமா அதிபரிடம் இருந்து ஆவணம் வந்ததும் விடுவதாக தெரிவித்தனர். ஆனால் அது தொடர்பாக இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனக்கு 4 பிள்ளைகள். அவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். நாங்கள் வாழ்வாதரம் எதுவும் இன்றி வறுமையில் இருக்கின்றோம்.
இந்த நிலையில் அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சாரா என்பவர் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.
அப்படி இருக்கும் போது எனது கணவர் செல்வராசா தேவகுமார் சாராவை இந்தியாவுக்கு தப்பி ஓட உதவி செய்தது என்பது எப்படி சாத்தியமாகும்.
சாரா உயிருடன் இல்லை என்றால் தப்பிக்க எப்படி உதவி செய்திருக்க முடியும். எனவே எனது கணவர் நிரபராதி என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரை விடுவித்து தருமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
