யாழில் திடீரென வெடித்து சிதறிய நாட்டுக்குண்டு! விசாரணைகளில் வெளியாகிய தகவல்கள் (Video)
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றில் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசப்படிருந்த நிலையில் மேலதிகமாக ஒரு நாட்டு வெடிகுண்டும், கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இன்று (19.04.2023) அதிகாலை மேற்கொண்ட விசாரணைகளின் போதே மேலதிகமாக ஒரு நாட்டு வெடிகுண்டும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கடித்தில் பண விவகாரம் பற்றி எழுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று கஸ்தூரியார் வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் காரொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam
