வவுனியா நெளுக்குளத்திலிருந்து சடலம் மீட்பு: அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை
வவுனியா (Vavuniya) நெளுக்குளம் குளத்தினுள் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன்> சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர், குளத்தினுள் சடலம் மிதப்பதினை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அவர் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இன்று (10.04.2024) காலை சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகள்
இந்நிலையில், குளக்கட்டின் மேற்பகுதியில் காலணியும் காணப்படுவதனால் தவறுதலாக குறித்த நபர் குளத்திற்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சடலமாக காணப்படும் நபர் மஞ்சள் நிற மேற்சட்டையுடன் சாரமும் அணிந்துள்ளதுடன் 55 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
