இங்கிலாந்தில் பயணப்பைகளில் மீட்கப்பட்ட இருவரின் உடற்பாகங்கள் : ஒருவர் கைது
தென்மேற்கு இங்கிலாந்தில்(England) இருவரை கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை பயணப்பைகளுக்குள் வைத்து, பாலம் ஒன்றின் அருகில் வைத்ததாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான அவர், 61 மற்றும் 71 வயதான இருவரை கொலை செய்து அவர்களின் உடல்களின் துண்டுகளை, இரண்டு பயணப்பைகளுக்குள் பொதியிட்டு பின்னர் பாலம் ஒன்றின் அருகில் அவற்றை விட்டுச்சென்றுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ள அவர் இன்று(15) லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
குறித்த சந்தேக நபர் , கொலை செய்யப்பட்டவர்களுடன் முன்னர் ஒன்றாக வாழ்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் கிளிஃப்டன் தொங்கு பாலத்தின் அருகில் இரண்டு பயணப்பைகளில் இந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு பின்னரே சந்தேகநபர், கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் லண்டனில் உள்ள குறித்த இருவரின் வீட்டில் மேலும் சில உடல் எச்சங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
