சுற்றுலா விடுதிக்கு முன்பாக மீட்கப்பட்ட இத்தாலிய பிரஜையின் சடலம்
பதுளை - எல்ல பிரதேசத்திற்கு வருகை வருகைத்தந்த இத்தாலிய(Italy) பிரஜை ஒருவர், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கபோனேரி எண்ட்ரியா(Caponeri Andrea) என்ற 49 வயதுடைய இத்தாலிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்ல பிரதேசத்திற்கு விஜயம்
நகரில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த அவர், எல்ல பிரதேசத்திற்கு விஜயம் செய்ததாகவும், பின்னர், இன்று(06.11.2024) அதிகாலை 04:30 மணியளவில் ஹோட்டலுக்கு முன்னால் மயங்கி விழுந்ததில் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டள்ளனர்.

இது தொடர்பில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததன் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 14 நிமிடங்கள் முன்
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam