கொழும்பில் பெரும் துயரம் - நீரில் இழுத்துச் செல்லப்பட்ட வாகனம் - இருவர் பலி
கொழும்பின் புறநகர் பகுதியில் தும்மோதர கால்வாயை கடக்க முயன்ற கெப் வண்டியொன்று திடீரென ஏற்பட்ட நீரோட்டத்தினால் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கொஸ்கம - எஸ்வத்த மாணக்கட வீதியில் ரபுகேவத்த பக்க வீதியில் தும்மோதர கால்வாய் பகுதியில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தும்மோதர கால்வாயை கடக்க சென்ற கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கி பலி
சம்பவத்தின் போது வண்டியில் சாரதி உட்பட 04 பேர் பயணித்துள்ளனர். கேப் சாரதியும் அதன் உரிமையாளரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 69 வயதுடைய பலல்கொடுவ மற்றும் கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
