காலி வீதியில் உயிரிழந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு
மொறட்டுவை புதிய காலி வீதியில் நடைபாதையில் 50 வயது மதிக்கதக்க ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மொறட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடைபாதையில் ஒருவர் விழுந்து கிடப்பதை கண்ட பிரதேசவாசிகள் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அதன் ஊழியர்கள் விழுந்து கிடந்த நபரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவரவில்லை. இந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இறந்த நபர் கோவிட் தொற்றாளியா என்பதை கண்டறிய பீ.சீ. ஆர் பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது.