முல்லைத்தீவில் திருடப்பட்ட படகு இயந்திரங்கள்: பொலிஸில் முறைப்பாடு
முல்லைத்தீவு கொக்குளாய் புளியமுனைப்பகுதியில் கடற்தொழில் செய்துவரும் கடற்தொழிலாளர்களின் இரண்டு படகுகளின் வெளியிணைப்பு இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
புளியமுனை கடற்கரை பகுதியில் வாடியில் வைத்த இரண்டு படகுகளே இவ்வாறு கடந்த 27ஆம் திகதி இரவு களவாடப்பட்டுள்ளதாக நேற்று(28) கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் படகின் உரிமையாளரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்தொழிலாளர் கவலை
தலா 9 இலட்சம் பெறுமதியான படகுவெளியிணைப்பு இயந்திரங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.

கடற்தொழிலை நம்பி வாழ்ந்துவரும் நிலையில் இவ்வாறன களவாடப்பட்ட சம்பவத்தினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri