மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவரை காணவில்லை
Jaffna
Northern Province of Sri Lanka
Accident
By Kajinthan
யாழ்ப்பாணம் மாதகல் கடலில் கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் பயணித்த படகு, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (04.09.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இரண்டு இளைஞர்கள் இவ்வாறு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.
தேடும் நடவடிக்கைகள்
இந்நிலையில், படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை, அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார்.
நாகராசா பகீரதன் என்ற 21 வயது இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அவரை தேடும் நடவடிக்கைகளை கடற்படையினரும் கடற்றொழிலாளர்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 22 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US