அவிசாவளையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு : ஒருவர் பலி
அவிசாவளை, மாதொல பிரதேசத்தில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மஸ்கெலியாவைச் சேர்ந்த 49 வயதுடையவராகும். படுகாயமடைந்த நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் மற்றுமொரு நபருடன் இரும்பு பொருட்களை அடுக்கி வைக்கும் போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வெடி விபத்து
வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த அவிசாவளை குற்றப்பிரிவு அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பரிசோதகர்கள் வரவழைக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் அவிசாவளை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam