மொட்டுக் கட்சியின் மாநாட்டுக்கு பா.ஜ.க. தலைவருக்கு அழைப்பு
இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான அமித் ஷாவை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் விசேட கூட்டம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டம், பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு முன்னர் நடைபெற்றுள்ளது.
கட்சியின் அடுத்தகட்ட நகர்வு, கட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பசிலின் உறுதி
இதன்போது,மொட்டுக் கட்சியின் மாநாட்டுக்கு, பாரதிய ஜனதாக் கட்சி தலைவரை அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முயற்சி முன்னெடுக்கப்படும் என பசில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், அமித் ஷாவின் வருகை தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக தகவல்
எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 12 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
