எரிபொருள் வரிசையில் பிறந்தநாள் கொண்டாட்டம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக எரிபொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் வரிசை என்பன மக்களை உச்சக்கட்ட அதிருப்தி நிலைக்குக் கொண்டுச் சென்றுள்ளது.
எரிபொருள் வரிசையில் பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்குதல், பானம் வழங்குதல் என பல மனிதாபிமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே, தன்னுடைய பிறந்தநாளை யுவதியொருவர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வெலிகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதியின் பிறந்தநாளான ஜூன் 19ஆம் திகதியன்று, ஸ்கூட்டரின் மேல் கேக் வைத்து வெட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வரிசையில் நின்றிருந்த ஏனையோரும், வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை அலங்கரித்து, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இன்றும் பிறந்தநாள்
அதேபோல, எரிபொருளைப் பெறுவதற்காக இரண்டு நாட்கள் வரிசையில் நிற்கும் இளைஞன் ஒருவருக்கு இன்று பிறந்தநாள். இதை அறிந்த வரிசையிலிருந்த ஏனையவர்வள் ஒன்றுதிரண்டு, வரிசையிலேயே அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
பேராதனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (21)இந்த சம்பவம் நடந்ததுள்ளதாக தெரியவருகின்றது. பேராதனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் என தெரிவிக்கப்பட்டதையடுத்து வரிசையில் நின்ற இளைஞர்கள் அருகில் உள்ள கடையில் இருந்து கேக்கை எடுத்து வந்து பிறந்தநாள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் கொண்டாடும் இளைஞன் இன்றும் வீடு செல்லாமல் வரிசையில் காத்திருப்பதுதான் சோகம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்... ஒரு காரின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள் Manithan

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து Manithan
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022