ரமழானிற்கு பின்னர் இலங்கையில் வெடிக்கும் போராட்டம்! அரசாங்கத்திற்கு சென்றுள்ள எச்சரிக்கை
மன்னார்- புத்தளம் வீதியை திறந்து தராது விட்டால் ரமழானிற்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம்(19.2.2026) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாடாளுமன்றத்திலே பொய்களைக் கூறி ஏமாற்றி விடாமல் பாதையை திறந்து தருமாறும் இல்லாவிடில் மாற்று பாதையை கடல்வழியாக திறந்து தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரிலே தமிழர்களும், முஸ்லிம்களும் வாழுவதால் எல்லோருடைய கண்ணும் குருடாக இருக்கின்றது.போக்குவரத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொய்யான குறறச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உடனடியாக குறித்த பாதையை திறந்து தருமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam