மருமகனை கொடூரமாக கொலை செய்த மாமனார்
கொழும்பின் புறநகர் பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.
கொஸ்கம பகுதியிலுள் வீடொன்றில் ஏற்பட்ட வாக்குவாததத்தில் மாமனார் தனது மருமகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஸ்வத்த வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய துஷான் ரங்கன மாயாதுன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த, குறித்த நபர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam