விவசாயிகளிடம் அறவிட்ட பல கோடி ரூபா நிதி தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரிக்கை
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான கமக்கார அமைப்புக்களின் சம்மேளம் என்ற அமைப்பினால் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் விவசாயிகளிடம் அறவிட்ட பல கோடி ரூபா நிதி தொடர்பில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகளால் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை அடங்கிய மகஜர்
கிளிநொச்சிக்கு இன்று (19-06-2025) விஜயம் செய்த அமைச்சரிடம் மேற்படி கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுத்தின் கீழான விவசாயத்தை நம்பி 7500 இற்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து இரணைமடு சம்மேளம் என்ற அமைப்பினால் கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை விவசாயிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பல கோடி ரூபா நிதி உரிய கணக்கறிக்கைகள் இன்றியும் திணைக்களங்களின் அனுமதிகள் இன்றியும் முறைகேடாக செலவிட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
உரிய விசாரணை
இந்த நிலையில் குறித்த நிதி நடவடிக்கைகள் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி விவசாயிகளால் குறித்த மகஜர் கையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
