ரஷ்யாவின் சொத்துக்களை பயன்படுத்தி உக்ரைனுக்காக பல பில்லியன் யூரோ கடன்கள்!
ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துக்களை பயன்படுத்தி உக்ரைனுக்காக பல பில்லியன் யூரோ கடன் வழங்க, ஐரோப்பிய தலைவர்கள் அவசரமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, கோரியுள்ளார்.
பிரஸல்ஸில் நடந்த உச்சி மாநாட்டில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு உக்ரைன் 45–50 பில்லியன் யூரோ நிதிப் பற்றாக்குறையை சந்திக்கலாம். அத்துடன், வசந்த காலத்துக்குள் நிதி கிடைக்காவிட்டால் ட்ரோன் தயாரிப்பு குறைய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
அமெரிக்கா–ரஷ்யா பேச்சுவார்த்தைகள்
ரஷ்யாவின் 210 பில்லியன் யூரோ சொத்துகளில் பெரும்பாலானவை பெல்ஜியத்தின் யூரோகிளியர் நிறுவனத்தில் உள்ளன.
இதை பயன்படுத்த சில நாடுகள் தயக்கம் காட்டினாலும், போலந்து பிரதமர் இதை அவசியம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்கா–ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகள் நெருங்கி வருகின்றன.
எனினும் உக்ரைனுக்கான ஐரோப்பிய தலைமையிலான படை ஆதரவை ஏற்க முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam