திருக்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி
அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள நேருபுரத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
லொறியின் சாரதி தப்பியோட்டம்
அத்துடன் லொறியின் சாரதி லொறியுடன் தப்பி சென்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் ஹிதாயாபுரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அப்துல் காதர் முகமது அலாவூதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பொத்துவில் ஹிதாயாபுரத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி நேற்று இரவு 7.20 மணியளவில் மோட்டர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது அக்கரைப்பற்று பகுதியில் இருந்து பொத்துவிலை நோக்கி பயணித்த லொறி ஒன்று நேரு புரத்தில் வைத்து குறித்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு திருக்கோவில் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam