படலந்த மீது பாய்ச்சப்பட்டுள்ள சட்டம்! பிமலின் உரையை கேட்டு நெகிழ்ச்சி அடைந்த சபாநாயகர்
படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று நாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது சபை முதல்வர் ஆற்றிய உரையை கேட்டு சபாநாயகர் நெகிழ்ச்சி அடைந்தள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை சபைத் முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்தார்.
மிகவும் உணர்ச்சிபூர்வமான உரையை நிகழ்த்திய பிமல் ரத்நாயக்க,
தாய்நாட்டின் உரிமை
“ மாண்புமிகு சபாநாயகரே , இந்த அறிக்கை, தாய்நாட்டின் உரிமைகளைப் பறித்து அதன் தலையை வெட்ட முயன்ற கொடுங்கோலர்களின் கொடுமை பற்றிய அறிக்கை மட்டுமல்ல.
ஒரு நாடு பல யுகங்களாக தங்கள் சொந்த அரசியல் நலன்களுக்காக எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதற்கும், ஜனநாயகத்திற்காக பெறப்பட்ட ஆணையின்படி, அவர்களின் வர்க்க நண்பர்களுக்காக அழிவு எவ்வாறு காட்டிக் கொடுக்கப்படுகிறது என்பதை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு உயிருள்ள சாட்சியமாகும்.
இருபத்தைந்து ஆண்டுகளாக கிடங்கில் கிடக்கும் ஒரு அறிக்கையின் மீது பாய்ச்சப்பட்டுள்ள சட்டம் மற்றும் நீதியின் வெளிச்சம்.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு எவ்வாறு நீதி வழங்குவது என்பது குறித்து எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சான்றாக அமையும் என்றும் நான் நம்புகிறேன்” என்றார்.
பிமல் ரத்நாயக்க
படலந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பிமல் ரத்நாயக்க ஆற்றிய உரையை கவனமாகக் கேட்ட சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன, நெகிழ்ச்சியடைந்திருந்தார்.

பிமல் ரத்நாயக்கவின் உரைக்குப் பிறகு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நெகிழ்ச்சியடைந்தமையை வெளிப்படத்தியிருந்தார்.
பின்னர், நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு வாய்ப்பை வழங்கினார்.மேலும் அவர் வலிமிகுந்த உடைந்த குரலில் அழைப்பை விடுத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri