அமைச்சர் கரி ஆனந்த சங்கரியை இலக்கு வைத்து திரைமறைவில் பெரும் சதி
கனடாவில் நீதியமைச்சராக இருந்த கரிஆனந்தசங்கரி தற்போது கனடாவின்(Canada) பொதுப்பாதுகாப்புதுறை அமைச்சராக இருக்கின்றார்.
இந்தநிலையில் எந்தவொரு ஆதாரமும் இன்றி கரி ஆனந்தசங்கரி மீது அவர் ஈழத்தமிழர் என்ற ஒரு காரணத்தினால் அவர் விடுதலைப்புலிகள் அமைப்போடு தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு இரண்டு பிரபல ஊடகங்களினால் முன்வைக்கப்படுகின்றது.
அதனைதொடர்ந்து கனேடிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தை பற்றி பேசுகின்றனர்.
அதன் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
ஏனெனில் ஈழத்தமிழர் ஒருவர் கனடாவில் முக்கிய பதவியொன்றை வகிப்பதை இலங்கை அரசு விரும்பாது.
ஆனாலும் கனேடிய பிரதமர் மார்க்கார்னி நேர்மையானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கரி ஆனந்த சங்கரியை இலக்கு வைத்தது யார்? அதன் பின்னணியில் இலங்கை அரசு இருக்கின்றதா? என்று ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...