துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் உயர்வு
இலங்கையில் துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை 40,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் அமல் சூரியகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தற்போது துவிச்சக்கர வண்டி செலுத்துவதை ஊக்குவிக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் துவிச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் அமல் சூரியகே கோரிக்கை விடுத்துள்ளார்.
துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு
எனினும், சந்தையில், துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக துவிச்சக்கர வண்டியின் பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் ரிஸ்மி இஸ்மத் தெரிவித்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், துவிச்சக்கர வண்டி இறக்குமதியின்போது அறவிடப்படும் வரியை, எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள நிவாரண பாதீட்டில் நீக்குமாறு சர்வதேச துவிச்சக்கர வண்டி ஓட்ட சம்மேளனத்தின் நடுவரான என்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.